Wednesday, January 14, 2026
HomeKisuKisuகொழும்பில் 'மசாஜ்' பெயரில் மன்மத லீலை! - தாய்லாந்து அழகிகள் உட்பட 10 பேர் கைது!

கொழும்பில் ‘மசாஜ்’ பெயரில் மன்மத லீலை! – தாய்லாந்து அழகிகள் உட்பட 10 பேர் கைது!

அடடே… கொழும்பின் ‘ஹை-கிளாஸ்’ ஏரியாவான கொழும்பு 7 (கறுவாத்தோட்டம்) பகுதியில பல நாளா ‘மசாஜ் நிலையம்’ என்ற போர்வையில இயங்கிவந்த ஒரு விபச்சார விடுதியைத்தான் பொலிஸார் நேற்று இரவு அதிரடியா மூடியிருக்காங்க.

கொழும்பு தெற்குப் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைச்ச இரசியமான தகவல் ஒண்டுதான் இந்த ‘களியாட்டத்துக்கு’ முற்றுப்புள்ளி வச்சிருக்கு.

பொலிஸ் அதிகாரி ஒருவர், தன்னை இந்தியப் பிரஜை மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு, இந்த மசாஜ் நிலையத்துக்குள்ள போய் முழுத் தகவலையும் சேகரிச்சிருக்காராம். எல்லாம் ஓகேன்னு உறுதியானதும், மசாஜ் நிலையத்தை வளைச்சுப் பிடிச்சிருக்காங்க!

இந்தச் சோதனையில, ஒன்பது தாய்லாந்துப் பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டிருக்காங்க. அதுல, அந்த மசாஜ் நிலையத்தின் முதலாளியும் அடங்குறாராம்.

இன்னும் ஒரு ஆச்சரியமான தகவல் என்னன்னா, கைது செய்யப்பட்ட முதலாளியிடம் விசாரித்தபோது, பெரிய பெரிய வர்த்தகர்கள் பலரும் இந்த விடுதிக்குத் தவறாமல் வந்து போவார்கள் என்று அவர் வாயைத் திறந்து சொல்லியிருக்காராம்!

கொழும்பின் உயர் மட்டத்தில் இருந்துகொண்டே இவ்வளவு காலமா நடந்த இந்த மர்மமான ‘மசாஜ்’ சாம்ராஜ்யம், இப்போ பொலிஸாரின் பிடியில சிக்கியிருக்கு. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடக்குதாம். இன்னும் யாருக்கெல்லாம் இதில் தொடர்பு இருக்குன்னு சீக்கிரமே வெளியாகும்னு மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments