ஒரு காலத்திலை EPDP முகாம் எண்டால் சும்மாவா? யாழ்ப்பாணமே அங்கைதான் நிக்கும். மக்கள் வெள்ளம் அலைமோதும், சிபாரிசு கடிதம் எடுக்கிறதுக்கும், குறைகளைச் சொல்லுறதுக்கும் சனம் கியூவிலை நிண்ட காலம் ஒண்டு இருந்தது. ஆனா இப்ப நிலைமை தலைகீழ்!
அமைச்சரும் இல்லை, பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இல்லை எண்ட உடனே, “பவர்” போன திசையைத் தேடி சனம் மெதுவா நழுவிட்டிது. அலுவலகமே இப்ப வெறிச்சோடி பூட்டித்தான் கிடக்குது.
நேற்றைய பொழுது நம்ம டக்ளஸ் தேவானந்தா (டக்கர்) அவர்கள், தலைமைக் காரியாலயத்திலை வைச்சு ஒரு பெரிய பெண்கள் மீட்டிங் போட்டிருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது… காரியாலயமே பெண்களால நிறைஞ்சு வழிஞ்சிருக்கு!






