Wednesday, February 18, 2026
HomeKisuKisuகிளிநொச்சி கல்லாறு பகுதியில் பரபரப்பு

கிளிநொச்சி கல்லாறு பகுதியில் பரபரப்பு

இன்று (20) பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவு நடத்திய திடீர் சோதனையில், கைவிடப்பட்ட வீட்டின் பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது, சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் போலீசாரால் உடனடியாக கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட நபர் இருவரும் தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், கஞ்சா வலையமைப்பின் பின்னணி மற்றும் தொடர்புடைய மற்றவர்களை கண்டறிவதற்காக தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
கல்லாறு கிராம மக்கள் மத்தியில் இந்த கைது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments