Wednesday, July 2, 2025
HomeUncategorizedகொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த 12 kg ஹெரோயின் மாயம்...

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த 12 kg ஹெரோயின் மாயம் !

 கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்குப் பொருட்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த 240 மில்லியன் ரூபா பெறுமதியான 12 kg ஹெரோயின்  காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெரோயின் கையிருப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு தொடர்பான கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையில் வைக்கப்பட்டிருந்தது.

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்து அரச புலனாய்வு சேவை அதிகாரி போன்று தோற்றமளிக்கும் நபர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ‘தரிந்து யோஷித’ எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர் ஒருவரே ஹெரோயின் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேக நபரை அடையாளம் காண விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரச புலனாய்வுப் பிரிவினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments