Wednesday, January 14, 2026
HomeSri Lankaஇந்தியாவில் இருந்து தப்பி வந்த ஈழத்தமிழ் அகதிகள் 9 பேர் கைது!

இந்தியாவில் இருந்து தப்பி வந்த ஈழத்தமிழ் அகதிகள் 9 பேர் கைது!

மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருந்த திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் உட்பட ஒன்பது பேர் சட்டவிரோதமாக நாட்டுப்படகில் நேற்று மாலை புறப்பட்டு இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே கரை இறங்கியுள்ளனர்.

இவர்கள் குறித்து தகவல் அறிந்த நெடுந்தீவு அரசு அலுவலர்கள் அவர்களை மாவிலித்துறை பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

இவர்களுக்கு நெடுந்தீவு மருத்துவமனை அரசு மருத்துவமனையில் முதலுதவி மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

நடுக்கடலில் இருநாட்டு கடற்படையின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியல் நாட்டுப்படகில் இலங்கைத் தமிழர்கள் தப்பி சென்ற சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மட்டத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments