Thursday, July 3, 2025
HomeKisuKisuசட்டவிரோத மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது

சட்டவிரோத மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது

கடுவலை பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்ட வீட்டில் சட்டவிரோத மதுபானத்தைத் தயாரித்து விற்பனை செய்து வந்த சந்தேக நபரொருவர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுவரி திணைக்கள அதிகாரிகள் சட்டவிரோத மதுபானத்தைக் கொள்வனவு செய்யும் போர்வையில் சந்தேக நபரை நீர்கொழும்பு பிரதேசத்திற்கு வரவழைத்து அவரை கைது செய்துள்ளனர்.

மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கி போத்தல்கள் எனக் கூறி சுமார் மூன்று மாத காலமாக இந்த சட்டவிரோத மதுபானத்தை விற்பனை செய்து வந்துள்ளதாக சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments