முன்னாள் IG தேசபந்து தென்னக்கோன் சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி பல மாதங்கள் கடந்துவிட்டது.
2024 ஆகஸ்ட் 31ம் திகதி கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில், தான் கல்வி கற்ற நாலந்தா கல்லூரியின் ஆண்டு நிகழ்வு ஒன்றே தென்னக்கோன் பங்குபற்றிய இறுதிப் பொது நிகழ்வு ஆகும்..
NPP கட்சியின் அனுரகுமார ஜனாதிபதியாவதற்குச் சில தினங்களுக்கு முன்பே அவர் தலைமறைவாகி இருந்தார் அல்லது நாட்டைவிட்டு ஓடிவிட்டார் என்று எமது புலனாய்வு அறிக்கைகள் கூறுகிறது. இவர் 2025இல் நாட்டில் நடமாடவில்லை.
இவர் பொலிஸ் பதவியில் இருந்த காலத்தில் சில காலங்களுக்கு முன்னர் JVPயின் மிக முக்கிய தலைவர் மீது பொய் குற்றச்சாட்டுக்கு கொடூர தாக்குதல் மேற்கொண்டிருந்தார் என்பது மேலதிக தகவலாகும்
பல காங்ஸ்டர்களிடம் பணம் வாங்கி எதிர் தரப்புகள் மீது அடக்குமுறையைப் பிரயோகிப்பதில் வல்லவரான தென்னக்கோன், தற்போது நாட்டிற்குள் இல்லை என்பதை எமது புலனாய்வு உறுதிப்படுத்துவதுடன், இவர் சுவிஸில் தஞ்சம் கோருவதற்குத் தமிழ் வர்த்தகர் ஒருவர் உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வர்த்தகர் புலிகளின் நிதியில் கோடீஸ்வரர் ஆன ஒருவராவார். குறித்த தமிழ் வர்த்தகர் 2020ஆம் ஆண்டளவில் 50 இலட்சம் பணத்தினை தென்னக்கோனின் மகனின் கல்வி நடவடிக்கைகளுக்கு வழங்கி உதவிய ஒருவராவார்.

