யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் நேற்று பட்டா ரக வாகனத்தில் மாடு கடத்திக் கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி வந்த கள்ளர்களை பொலிசார் இடை மறித்த போது நிறுத்தாமல் சென்றுள்ளார்கள்.
இதனை அடுத்து அப்பகுதியில் கடமையிலிருந்து கடற்படையினர் வீதியில் இரும்பு முள்ளு றோலை வீசி எறிந்து வாகனத்தை நிறுத்தியுள்ளார்கள். இதனையடுத்து பொலிசாரால் குறித்த மாடு கள்ளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

