HomeKisuKisuமனைவியை கர்ப்பமாக்குவதாக மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய கணவன்

மனைவியை கர்ப்பமாக்குவதாக மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய கணவன்

கனடாவை வதிவிடமாகக் கொண்ட, இரு பிள்ளைகளின் தந்தையான மகாலிங்கம் செந்தூரன் (வயது 39) என்பவர், யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவருடன் திருமணப் பதிவு இல்லாமல் சட்டவிரோத உறவில் வாழ்ந்து வருகிறார் என அவரது மனைவி பொலிசாரிடம் பரபரப்பான முறைப்பாடு செய்துள்ளார். அதிலும் அதிசயம் – அந்தப் பெண் இவருடைய மனைவியின் தங்கை என தெரியவருகிறது!

2010ஆம் ஆண்டு கனடா சென்ற செந்தூரன், 2016ல் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த யுவதியுடன் திருமணம் செய்து இருவரும் கனடாவில் வாழத் தொடங்கினர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். ஆனால் கடந்த வருடம், மனைவியை கடுமையாகத் தாக்கியதாகக் கூறி இவர்மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின் சிறை அனுபவமும், பின்னர் மனைவியின் வீட்டில் செல்லக்கூடாத நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு யாழ்ப்பாணம் திரும்பிய செந்தூரன், அதிர்ச்சி அளிக்கும் முடிவெடுத்து தனது மனைவியின் தங்கையுடன் ஒரு கூட்டுவாழ்வு தொடங்குகிறார். சிக்கலாக இருப்பது என்னவென்றால், மனைவியின் தங்கை திருமணம் ஆனவர்! அவருடைய கணவர் தற்போது பெலாறஸ் நாட்டில் சட்டவிரோதமாக உள்ளே புகுந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்நிலையில், மனைவியின் தங்கை 4 மாத கர்ப்பமாக இருப்பதற்கு செந்தூரனே காரணம் எனவும்,  கிளினிக் என அனைத்து பராமரிப்புகளையும் செந்தூரனே செய்து வருகிறார் என்பது உறுதியாகியுள்ளது!

இதில் அதிர்ச்சிகரமான திருப்பமாக, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தற்போது கொழும்பில் உள்ள அவரது மனைவி, கணவனின் சட்டவிரோத உறவிற்கெதிராக போலீசில் முறையிட்டு, மேலதிகமாக நீதிமன்ற நடவடிக்கைகளும் எடுக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments