Tuesday, July 1, 2025
HomePolticalபிரபாவின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை

பிரபாவின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை

விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை பயன்படுத்தியதற்காக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் தாக்கல் செய்த மனு, திரும்ப பெறப்பட்டதை அடுத்து, நீதிமன்றம் வழக்கை நிராகரித்து உத்தரவு வழங்கியது.

சமீபத்தில் பரவலாக பேசப்பட்ட இந்த வழக்கில், 2009-ம் ஆண்டில் சீமான் பிரபாகரனை நேரில் சந்தித்து, ஏகே-47 துப்பாக்கியுடன் போர் பயிற்சி எடுத்ததாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருவதாகவும் மனுவில் கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்களை தேர்தல் பிரச்சாரங்களில் அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்தி, வன்முறையை தூண்டும் வகையில் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில், இன்று (ஜூன் 19) வழக்கு தலைமைய நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அரசுக்கு பதிலளிக்க 15 நாட்கள் அவகாசம் தர வேண்டாமா? என்ற நீதிபதியின் கேள்விக்கு பிறகு, மனுதாரர் தாமாகவே மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார்.

இதனை அட்டகாசமாக ஏற்ற நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து முடிவுக்கு கொண்டு வந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments