யாழ் மத்தியகல்லுாரிக்கு முதல் முதலாக பெண் அதிபர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே குறித்த பெண் அதிபர் கல்வி அமைச்சால் நியமினம் செய்யப்பட்ட போது டக்ளஸ்தேவானந்தாவால் அந்த நியமனம் பிற்போடப்பட்டு அவரது ஆதரவாளரான இந்திரகுமார் என்பவரே அதிபராக தொடர்ந்து நியமிக்கப்பட்டிருந்தார். தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின் நாடாளுமன்றத்தில் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

