Monday, December 8, 2025
HomeKisuKisuமொடலிங் ஆசையில் 23 வயது சிங்களத்தி கற்பை இழந்தது எப்படி?

மொடலிங் ஆசையில் 23 வயது சிங்களத்தி கற்பை இழந்தது எப்படி?

முகநூல் விளம்பரம் மூலம் அறிமுகமான நபர் ‘போட்டோ ஷூட்டிங்கிற்கு பெண்களை தேடுவதாக’ கையடக்கத் தொலைபேசிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை அடுத்து, மொடலாக ஆசைப்பட்டுச் சென்ற அழகுக்கலையில் ஈடுபடும் யுவதியொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். ‘.

அனுராதபுரம் நகருக்கு அருகில் வசிக்கும் 23 வயதுடைய அழகுக்கலையில் ஈடுபடும் யுவதி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

முகநூல் மூலம் அடையாளம் காணப்பட்ட நபர் அந்த யுவதியை தொடர்பு கொண்டு, ‘போட்டோ ஷூட்டிங்கிற்கு பெண்களை தேடுவதாக’ வும், யுவதி மொடலாக செயற்பட விரும்பினால், புகைப்பட கலையகமான தனது நிறுவனத்தின் தலைவர், யுவதியை சந்திக்க விரும்புவதாகவும், ‘புகைப்படம் குறித்த அனைத்து விவரங்களையும் அவரால் விவாதிக்க முடியும் என்றும் கூறினார்.

இதனை நம்பிச் சென்ற யுவதியை, அநுராதபுரம் திஹியாகம சந்தியில் இருந்து மல்வத்து ஓயாவை அண்மித்த ஹோட்டலுக்கு முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்ற சந்தேகநபர், ஹோட்டல் அறையில் வைத்து பலாத்காரம் செய்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்திற்கு முகங்கொடுத்த யுவதி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments